முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு நீர் திறப்பு Water released from Mullai Periyar Dam
பெரியாற்றில் காட்டாறு வெள்ளம்
உபரி நீர் கேரளாவிற்கு திறப்பு
கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
30 ஆண்டுகளுக்கு பின் சம்பவம்
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் இடுக்கி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலைகளிகல் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நேற்று இரவு முதல் அதிகப்படியான நீர் வரத்து வந்து கொண்டிருந்தது .
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,375 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி அணை நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரத்து 733 கனஅடியாக அதிகரித்தது