மும்பை தாக்குதல் பயங்கரவாதி இந்தியா கொண்டுவரப்படுவான் mumbai attack| tahawwur rana| US approved
மும்பையில் 2008 ல் நடந்த பயங்கரவாத தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலின் முக்கிய சதிகாரர்களின் ஒருவனான தஹாவூர் ராணா இப்போது அமெரிக்க சிறையில் இருக்கிறான். பாகிஸ்தானை சேர்ந்த ராணா அந்நாட்டு ராணுவத்தில் சில காலம் வேலை செய்து பின் அமெரிக்காவில் குடியேறினான். அங்கு லஷ்கரே தெய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் சேர்ந்து மும்பை தாக்குதலுக்கு உதவினான். இந்தியா வந்து வெடிகுண்டு தாக்குதலுக்கான இடங்களை தேர்வு செய்தான். தேடப்படும் குற்றவாளியான ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார். இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா முறையிட்டான். இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்; நான் பாகிஸ்தானிய முஸ்லிம் என்பதால் இந்தியாவில் சித்தரவதை செய்யக்கூடும்;