உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிலிண்டரை தாண்டி பகீர்? அதிகாலையில் நடந்த அதிர்ச்சி | Namakkal | Blast | Tiruchengode

சிலிண்டரை தாண்டி பகீர்? அதிகாலையில் நடந்த அதிர்ச்சி | Namakkal | Blast | Tiruchengode

50 மீட்டருக்கு பறந்த கடை ஷட்டர்! நாமக்கல் அருகே வெடித்தது என்ன? நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார். திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் டீ கடை வைத்துள்ளார். அதிகாலை 3.40க்கு திடீரென கடைக்குள் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. உள்ளே இருந்த மொத்த பொருட்களும் ரோட்டில் சிதறி விழுந்துள்ளது. கடைக்குள் இருந்த பேன், சிசிடிவி கேமராக்கள் என எதுவும் மிஞ்சவில்லை. எல்லாம் ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நிலையில் கிடந்தது. வெடி சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிதறி கிடந்த பாகங்களை சேகரித்து சோதனை செய்தனர். மின் கசிவோ, சிலிண்டர் எரிவாயு கசிவோ இல்லை என தெரிவித்தனர். மர்மமான பொருள் ஏதேனும் டீ கடைக்குள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. கடையின் ஷட்டர் சுமார் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டு எதிரே உள்ள பள்ளி ஒன்றின் காம்பவுண்ட் சுவர் அருகே கிடந்தது. இரும்பு சட்டர் வெடித்து சிதறும் அளவிற்கு என்ன வெடித்தது என்பது குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. வெடி விபத்தில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அருகே உள்ள கடைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிசிடிவி காட்சிகளில் தீப்பொறி ஆரம்பமாகி வெடிப்பது தெரிகிறது. இது குறித்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து கூறினால் தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி