/ தினமலர் டிவி
/ பொது
/ இளநீர் வெட்ட போனவருக்கு மர உச்சியில் நடந்தது என்ன? | Namakkal | Rasipuram | Ambulance
இளநீர் வெட்ட போனவருக்கு மர உச்சியில் நடந்தது என்ன? | Namakkal | Rasipuram | Ambulance
நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள வையப்பமலையை சேர்ந்தவர் ரவி. வயது 46. ஏ.கே.சமுத்திரம் கிராமத்தில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்கிறார். வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ரவி தென்னை மரத்தில் ஏறினார். இளநீர் வெட்டி கீழே போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் தெரியாமல் குளவி கூட்டில் கால் வைத்துள்ளார். அதில் இருந்து கிளம்பிய குளவிகள் ரவியின் முகம்,கை, கால்களை கடித்துள்ளது. ஒரே நேரத்தில் பல குளவிகள் கடித்ததால் ரவி தென்னை மர உச்சியில் மயங்கி சரிந்தார். இளநீர் வெட்ட போனவர் நீண்ட நேரமாக காணவில்லை என்பதால் தோட்ட பணியாளர்கள் அவரை தேடினர்.
ஜன 17, 2025