களமிறக்கப்பட்ட அதிரடிப்படை போலீசார் | Naxals | Task Police Force
தமிழக - கேரள எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அரசுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றனர். நக்சல்கள் போராட்டத்துக்கு ஆதரவு கேட்கின்றனர். கேரளாவில் அரசு அலுவலகங்கள், சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. நக்சல் நடமாட்டத்தை தடுக்க தமிழகத்தில் எல்லையோர பகுதிகளை அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு கண்காணிக்கிறது. கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 28, 2024