நெல்லை கிராமத்தை பதறவைத்த துப்பாக்கிச்சூடு-பதற்றம் | pappakudi police shooting | nellai crime news
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ரஸ்தாவூரில் வசிப்பவர் சக்திகுமார் வயது 22. இவரது வீட்டுக்கு வந்த ரவுடி கும்பல், சக்திகுமாரை சரமாரியாக தாக்கியது. எங்களை பற்றி எப்படி போலீசுக்கு தகவல் சொல்லலாம் என்று சொல்லி அடித்தது. அவர்களிடம் இருந்து தப்பிய சக்திகுமார், ஓடி சென்று அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தார். கதவை பூட்டி உள்பக்கமாக தாழிட்டார். உடனே தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வீட்டின் கதவை சரமாரியாக கொத்த ஆரம்பித்தது ரவுடி கும்பல். அந்த கும்பலும், சக்தி குமாரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இது பற்றி பாப்பாக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்த நபர்கள், இரு சமூகத்தினர் இடையே மோதல் நடப்பதாக கூறினர். உடனே மற்ற போலீசாரை சம்பவ இடத்துக்கு வர சொல்லி விட்டு, முதல் ஆளாக எஸ்ஐ முருகனும், கான்ஸ்டபிள் ரஞ்ஜித்தும் விரைந்தனர். வீட்டில் அரிவாளால் கொத்திய கும்பலை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் சமாதானமாக பேச பார்த்தார். அப்போது கும்பலில் இருந்த 2 சிறுவர்கள் ஆத்திரத்தில் எஸ்ஐ மற்றும் கான்ஸ்டபிளை வெட்ட பாய்ந்தனர். அவனிடம் இருந்து 2 பேரும் லாவகமாக தப்பினார். ஆனாலும் சிறுவர்கள் விடவில்லை. 2 பேரையும் வெட்டுவதற்காக அரிவாளுடன் துரத்தினர். கான்ஸ்டபிள் ரஞ்சித் காயங்களுடன் தப்பினார். எஸ்ஐ முருகன் அங்குள்ள இன்னொரு வீட்டுக்குள் புகுந்து கதை பூட்டிக்கொண்டார்.