தடுமாறி ஆற்றில் விழுந்த யானை என்ன ஆனது?
நீலகிரியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. கூடலூரில் கனமழை பெய்வதால், பாண்டியார்- புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓவேலி வனப்பகுதியில் 4 யானைகள் ஆற்றை நடந்து செல்ல முயன்றன. அப்போது, பெண் யானை, நிலைத்தடுமாறி ஆற்றில் விழ, வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது. 300 மீட்டர் தூரம் வரை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானை, நீந்தி கரை சேர்ந்தது.
ஜூன் 28, 2024