மதுவுக்கு கூடுதல் பணம் வசூல்: அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
மது வகைகளை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் விற்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட சில மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதற்கும் கூடுதல் பணம் வசூலிக்கிறார்கள். கள் விற்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வக்கீல், மது வகைகளை ரேஷன் கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் விற்பது என்பது அரசின் கொள்கை முடிவை பொறுத்தது. இதில் யாரும் தலையிட முடியாது என்றார்.
ஜூலை 22, 2024