உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கேயம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் | Kangeyam Fire | Family Issue | police Investigation

காங்கேயம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் | Kangeyam Fire | Family Issue | police Investigation

திருப்பூர், காங்கேயம் அடுத்த எல்லப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி, வயது 70. இவரது மகள் அம்பிகாவின் கணவர் ராஜ்குமார், வயது 50. படியூரில் ஹாலோ பிளாக் கம்பெனி நடத்தி வருகிறார். பழனிசாமி மற்றும் ராஜ்குமார் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் ஆறு வருடமாக பேசாமல் இருந்துள்ளனர். சொத்து தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பழனிசாமி இன்று மேய்ச்சலுக்கு சென்று இருந்தார். அவரை வழிமறித்த ராஜ்குமார், வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் பழனிசாமியை நோக்கி சரமாரியாக சுட்டார். ராஜ்குமார் 5 முறை சுட்டதில் குண்டு பாய்ந்து பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். மாமனாரை கொன்று விட்டு வீடு திரும்பிய ராஜ்குமார் நெத்தியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி