/ தினமலர் டிவி
/ பொது
/ 2 மணி நேர மழைக்கே பரிதவிக்கும் சென்னை மக்கள் | Heavy rain | Chennai | Flood problem
2 மணி நேர மழைக்கே பரிதவிக்கும் சென்னை மக்கள் | Heavy rain | Chennai | Flood problem
சென்னையின் பல இடங்களில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரமே தண்ணீரில் தத்தளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சாலைகளிலும் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி விடிந்த பிறகும் வடியாமல் உள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை மாரிமுத்து தெருவில் மழைநீருடன் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. அப்பகுதி மக்கள் இரவு முதலே வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற போராடி வருகின்றனர்.
செப் 26, 2024