கிராம சபையில் கறுப்பு கொடி காட்டிய மக்கள்
கிராம சபையில் கறுப்பு கொடி காட்டிய மக்கள் திருநெல்வேலி மாநகராட்சியுடன் ரெட்டியார்பட்டி, இட்டேரி முன்னேற்பள்ளம், நொச்சிகுளம், ராமையன்பட்டி உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளை இணைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அப்படி இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் ரத்தாகும் என பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காந்திஜெயந்தியொட்டி இன்று இட்டேரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கருப்புக்கொடியுடன் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல ராமையன்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். கவுன்சிலர் மாரியப்பன் என்பவர் தரையில் உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அக் 02, 2024