/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் பூத்தை எரித்து மக்கள் ஆவேசம் West bengal | Minor girl killed | Tension | Police Booth
போலீஸ் பூத்தை எரித்து மக்கள் ஆவேசம் West bengal | Minor girl killed | Tension | Police Booth
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று மதியம் 2.30-க்கு அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றாள். டியூஷன்முடிந்த பிறகும் வீடு திரும்பவில்லை. சிறுமியின் பெற்றோர் தேடியும் கிடைக்காததால் வீடு அருகில் உள்ள போலீஸ் பூத்தில் புகார் செய்தனர். போலீஸ் பூத்தில் இருந்தவர்கள் புகாரை வாங்க மறுத்தனர். இதையடுத்து ஜாய் நகர் போலீஸ் நிலையம் சென்று சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். நேற்று இரவு 9 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியை போலீசார் தேட ஆரம்பித்தனர்.
அக் 05, 2024