மோட்டார் வைத்து உறிஞ்ச உறிஞ்ச நிரம்பும் சப்வே | Chennai Rain | Rain Alert
சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியது. பம்பு செட்கள், தண்ணீர் உறிஞ்சும் நவீன இயந்திரங்களுடன் மாநகராட்சி ஊழியர்கள் களமிறங்கினர். குறிப்பாக வட சென்னையில் வியாசர்பாடி ஜீவா மேம்பாலம், சுந்தரம் மேம்பாலம் பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அடியில் இரவு பெய்த மழையினால் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் நள்ளிரவில் அந்த வழியாக போக்குவரத்து தடைப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை உறிஞ்சி அகற்றியதால் அதிகாலை போக்குவரத்து சீரானது.
அக் 15, 2024