மழையில் இடிந்த வீடு உயிர் தப்பிய பெண்
புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாத நிலையில், இன்று காலை இடி மின்னலுடன் மழை பெய்தது. கிழக்கு கடற்கரை பகுதி, லாஸ்பேட்டை ஆகிய பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. உப்பளம், அரியாங்குப்பம், ஊசுடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அக் 19, 2024