குப்பையை அகற்ற இரவு முதலே பணி! | Diwali Celebration | Tiruchi | Madurai | Kovai
திருச்சி மாநகரில் சராசரியாக ஒரு நாளைக்கு 400 டன் முதல் 420 டன் வரை குப்பைகள் சேரும். தீபாவளியை ஒட்டி பண்டிகைக்கு முந்தைய நாள் பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் காலிப் பெட்டிகள் என இன்று 120 டன் குப்பை கூடுதலாக குவிந்துள்ளது. பெரிய கடை வீதி, பர்மா பஜார், என்எஸ்பி, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகளில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை வந்துள்ளது. இரவு முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆயிரம் பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1050 பேரும் சேர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் மதுரை மாநகரில் 850 டன் குப்பை வழக்கமாக சேரும். வழக்கத்தை விட 5 மடங்கு அதிக அளவில் குப்பைகள் தேங்கி உள்ளது. துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு சார்பில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.