சிவகங்கை கலெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள் sivagangai ammapattinam village
சிவகங்கை கலெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள் sivagangai ammapattinam village kalaiyarkoil public well Asha Ajith IAS sivagangai Collector சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில் 64 ஆண்டுகள் பழமையான பொது குடிநீர் கிணறு உள்ளது. இக்கிணற்றை சுற்றி 5 அடி உயரத்துக்கு சிமென்ட் சுவர் கட்டப்பட்டிருந்தது. இந்த கிணற்று நீரை அம்மாபட்டினம், வேலடிதம்பம், வேம்பனி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். தொடர் மழையால் கிணறு உள்வாங்கியது. திடீரென சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. தண்ணீர் எடுக்க வந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்த கிணறு சாலையோரம் உள்ளதால் அப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விழுந்துவிட வாய்ப்புள்ளது. உடனடியாக கிணற்றை சுற்றி சுவர் எழுப்ப வேண்டும்; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் கிராம மக்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.