/ தினமலர் டிவி
/ பொது
/ டாக்டர்கள் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு பாதிப்பு | Doctors strike | Patients suffer
டாக்டர்கள் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு பாதிப்பு | Doctors strike | Patients suffer
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைமை மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அதேசமயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதையடுத்து சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
நவ 14, 2024