உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புயலால் கடல் சீற்றம்; சேதமாகும் படகுகள்

புயலால் கடல் சீற்றம்; சேதமாகும் படகுகள்

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது. இது நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும், அதற்கு முன்பே புயல் வலுவிலக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், கானத்தூர் ரெட்டி குப்பம், முட்டுக்காடு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், படகுகள் கடலில் நிறுத்தப்பட்டு உள்ளன. கடல் சீற்றத்தின் காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன. இதனால், மீனவர்கள் ஊராட்சி உதவியுடன் கிரேன் மூலம் படகுகளை கரைக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை