உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்த 12 மணிநேரம்: வெதர்மேன் தந்த அப்டேட் fengal cyclone chennai rain KTCC area Tamil Nadu Weath

அடுத்த 12 மணிநேரம்: வெதர்மேன் தந்த அப்டேட் fengal cyclone chennai rain KTCC area Tamil Nadu Weath

அடுத்த 12 மணிநேரம்: வெதர்மேன் தந்த அப்டேட் fengal cyclone chennai rain KTCC area Tamil Nadu Weatherman Pradeep John forecast வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கி. மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி நகர்கிறது. இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை பெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளார். இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்துக்கு அதிக மழை இருக்கும் எனவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ