உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 500மிமீ எகிறுது... பேய் மழையால் ஒரு நகரே மிதக்குது cyclone fengal | fenjal update| puducherry rain

500மிமீ எகிறுது... பேய் மழையால் ஒரு நகரே மிதக்குது cyclone fengal | fenjal update| puducherry rain

தமிழகம், புதுச்சேரியை மிரட்டி வந்த பெஞ்சல் புயல், காரைக்கால், மாமல்லபுரம் இடையே நள்ளிரவில் முழுமையாக கரையை கடந்தது. புயலின் கண் பகுதியை புதுச்சேரியையொட்டியபடி ஒரு மணி நரம் கடந்து சென்றது. புயலின் முன் பகுதியை கரையை கடக்க ஆரம்பித்ததும் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. புதுச்சேரியில் விடிய, விடிய பேய் மழை கொட்டித்தீர்த்தது. அதிகாலை 4 மணி வரை மழை நிற்கவில்லை. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் காலை 6 மணிக்கு மிக கனமழை வெளுத்து வாங்க ஆரம்பித்தது. நேற்று மாலை முதல் அதிகாலை 3 மணி வரை மட்டும் மட்டும் பதிவான மழை அளவு 410 மில்லி மீட்டர் வரை எகிறியது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை