மோடி பயங்கர பிசி! இந்தியா வர காத்திருக்கும் பெரிய தலைகள் | PMModi | New Year | 2025 Year
மோடி பயங்கர பிசி! இந்தியா வர காத்திருக்கும் பெரிய தலைகள் | PMModi | New Year | 2025 Year பிறக்க போகும் புத்தாண்டு எப்படியிருக்கும் என பல ஜோதிடர்கள் ராசி, நட்சத்திரம் அடிப்படையில் கணித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு 2025 எப்படி இருக்கும் என ஜோதிட ரீதியாக பார்க்காமல் அரசியல் ரீதியாக பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது சட்டசபை தேர்தல் நடந்தபடியே இருக்கும். மோடி பிசியாகவே இருப்பார். ஆனால் 2025ல் 2 மாநில சட்டசபை தேர்தல் மட்டுமே நடக்க உள்ளது. அதில் ஒன்று டில்லி. இது முழு சட்டசபை கிடையாது. பிப்ரவரி மாதம் டில்லிக்கு தேர்தல் நடைபெறும். நவம்பரில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 2025ல் மோடிக்கு பெரிய அளவில் தேர்தல் நெருக்கடி கிடையாது. ஆனால் வெளிநாடு தொடர்பான நிறைய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் உச்சி மாநாடு 2025 செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க, ஆஸ்திரேலிய , ஜப்பான் அதிபர், பிரதமர்கள் பங்கேற்பர். இது ஒரு முக்கியமான மாநாடு. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன் முறையாக இந்தியா வருவார் டொனால்டு டிரம்ப். இதற்கான ஏற்பாடுகளில் படு பிசியாகி விடுவார் மோடி. இதற்கு முன்னதாக பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மோடி. ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பல தலைவர்கள் இந்தியா வர உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் பங்கேற்க வெளிநாடு அதிபர்களை அழைப்பது வழக்கம். இந்த முறை இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியா வருகிறார். இந்தியா - இந்தோனேஷியா நட்பு குறித்து பேச்சு நடைபெறும். 1950ல் முதல் குடியரசு தின விழாவிலும், அப்போதைய இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ பங்கேற்றார். தேர்தல் ரீதியாக மோடி பிசியாக இல்லாவிட்டாலும், வெளிநாட்டு விவகாரங்களில் 2025ல் படு பிசியாக இருப்பார்.