உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் அலட்சியம் | TNEB | Struggling with arrears | Local bodies | Govt

உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் அலட்சியம் | TNEB | Struggling with arrears | Local bodies | Govt

உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள் அலட்சியம் | TNEB | Struggling with arrears | Local bodies | Govt departments | தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சி, 138 நகராட்சி, 529 டவுன் பஞ்சாயத்து, 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில், குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அரசு பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக மின் கட்டணம் செலுத்துவதில்லை. ஏற்கனவே தமிழக மின் வாரிய நிதி நிலை மிக மோசமாக உள்ளது. இதை காரணம் காட்டி மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. வீட்டு இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும். அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பிறகே, மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இதனால் தனி நபர்கள், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், 60 நாட்கள் அவகாசம் அளித்தும், உள்ளாட்சி அமைப்புகள் மாத கணக்கில் கட்டணம் செலுத்தாமல் உள்ளன. குடிநீர் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும், மின் கட்டணத்தை சரிவர செலுத்துவதில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள 5.68 லட்சம் மின் இணைப்புகளில், 3,016 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளதாக தமிழக மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் கூறியுள்ளது. குடிநீர் வாரியம், பள்ளி, விடுதி, மருத்துவமனை, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு துறைகளை சேர்த்து, 1.07 லட்சம் மின் இணைப்புகளில் 4,335 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என தமிழக அரசு மூலம் 7,351 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. 2020 - 21ல், 1.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மின் வாரிய கடன் தொகை 2021 - 2024ல், 1.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி, பிற பிரிவுகள் போல் உடனே இணைப்பை துண்டிக்கவும் முடியாது. அரசு பணிகளிலும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பாக்கியை செலுத்த, அழுத்தம் மட்டும் கொடுக்கப்படுகிறது. இதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகையை செலுத்துவதில்லை என்றும் கூறுகின்றனர்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை