அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் எப்படி அனுமதி? | Annamalai | DMK | Madurai 144
அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் எப்படி அனுமதி? | Annamalai | DMK | Madurai 144 அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டியில் நேற்று பேரணி சென்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தை காக்க, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை அறிவித்தது. மக்கள் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் திமுக அரசு தடை விதித்தது. ஆனால் அதே நேரம் தமிழகம் முழுதும் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் திமுகவினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியிருக்கிறது. நேற்றும், இன்றும் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்த திமுக அரசு, அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கியது என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுதும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரை, சட்ட நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றி வருவது போல, அமைச்சர் மூர்த்தியையும், சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட அனுமதிக்கிறதா திமுக அரசு? திமுகவினர் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் பாரபட்சமாக செயல்படும் திமுகவை, ஐகோர்ட்டே கண்டித்திருக்கிறது. நாட்டின் சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு, வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இதற்கான விலையை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து உள்ளார்.