துணை முதல்வரை சந்திக்க வந்த பெண் திடீர் போராட்டம் Women Protest | Udhayanidhi Function | Theni
துணை முதல்வரை சந்திக்க வந்த பெண் திடீர் போராட்டம் Women Protest | Udhayanidhi Function | Theni தேனியில் நடைபெற்ற அனைத்து துறைகள் சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். பின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது ஷீலா என்ற பெண் உதயநிதியை சந்தித்து மனு கொடுக்க முயற்சித்தார். போலீசார் தடுத்து நிறுத்தினர். கோபமடைந்த ஷீலா, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் தடையாக இருப்பதாக ஷீலா குற்றம் சாட்டினார். கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் துணை முதல்வர் உதயநிதியிடம் மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார்.