தொட்டதெல்லாம் துலங்க பக்தர்கள் தரிசனம் | Aadi Perukku 2025 | Aadi Perukku Celebration
தொட்டதெல்லாம் துலங்க பக்தர்கள் தரிசனம் | Aadi Perukku 2025 | Aadi Perukku Celebration ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு கோயில்களில் தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றில் படையலிட்டு, தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம் என்பதால் விவசாயிகளும் விதைகளை விதைத்து வருகின்றனர். இதே போல் மேட்டூர், திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரைகளில் மக்கள் படையலிட்டு பூஜை நடத்தி, தம்பதிகள் மஞ்சள் கயிறு, புது தாலி மாற்றி கொண்டனர். பலர் புது தொழில் துவங்கினர். இன்று வாங்கும் பொருளில் செல்வம் சேரும் என்பதால் நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.