19ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிப்பு! Rameswaram fishermen | Strike | Sri Lankan
19ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிப்பு! Rameswaram fishermen | Strike | Sri Lankan navy இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். வரும் 19ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், எம்எல்ஏ காதர் பாஷா முத்துராமலிங்கம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறிவித்தபடி 19ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என மீனவர்கள் கூறி உள்ளனர்.