/ தினமலர் டிவி
/ பொது
/ சாலையை முறையாக பராமரிக்காததால் கோர்ட் அதிரடி உத்தரவு | NHAI | Madurai to Thoothukudi | Tollgate
சாலையை முறையாக பராமரிக்காததால் கோர்ட் அதிரடி உத்தரவு | NHAI | Madurai to Thoothukudi | Tollgate
துாத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். மதுரை டு துாத்துக்குடி இடையே நான்குவழிச்சாலை அமைக்க 2006ல் ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்த பணி வழங்கப்பட்டது. 2011 முதல் சாலை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் சாலையை அந்த நிறுவனம் முறையாக பராமரிக்க தவறி உள்ளது. ஒப்பந்ததாரர் நிறுவனம் சாலையின் இருபுறம் மற்றும் நடுவில் மரங்கள் நடவேண்டும். பகுதி அளவு மட்டுமே அப்பணி நடந்துள்ளது.
ஜூன் 04, 2025