சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் அலசல் |NIA Raid| Tamilnadu NIA raid
தமிழகத்தில் 12 இடங்களில் NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தொடர்பான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்துவதாக தெரியவந்துள்ளது. சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் ஜேசிஸ் பள்ளி அருகே ஷர்புதீன் வீட்டில் கொச்சி என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டனர். புதுக்கோட்டை, மாத்தூரில் அப்துல்கான் வீடு, சென்னையில் முகமது இஷாக் வீடு உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.
ஜூன் 30, 2024