லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடந்த டீல்! Nitin Gadkari| opposition party| Bjp
நாக்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் விருது வழங்கும் விழாவில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். பின் பேட்டி அளித்த அவர், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, எதிர்கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், பிரதமர் பதவிக்கான வாய்ப்பு தருவதாக கூறி தம்மை அணுகியதாக கூறினார். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பாஜவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; ஆட்சி அமைக்க சில எதிர்கட்சிகளின் ஆதரவு தேவைப்படலாம் என்று நம்பப்பட்டது. அந்த சமயத்தில், எதிர்கட்சியின் மூத்த அரசியல்வாதி தம்மை தொடர்பு கொண்டு அழைத்ததாக கட்கரி கூறினார். ஆனால், அவரிடம் நான் சில கொள்கைகள், நம்பிக்கைகளுடன் வளர்ந்தவன். அவற்றில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.