/ தினமலர் டிவி
/ பொது
/ நுழைவு தேர்வை நடத்துவதில் இத்தனை சவால்களா? | NTA | Mess in entrance exams | Challenges faced | NEET
நுழைவு தேர்வை நடத்துவதில் இத்தனை சவால்களா? | NTA | Mess in entrance exams | Challenges faced | NEET
2016ல் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமானது. இதை சி.பி.எஸ்.இ தான் நடத்தியது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் வினாத்தாள்கள் உள்ளதாக பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்வு குறித்து, ஆங்காங்கே சில முறைகேடு புகார்களும் எழுந்தன. அதனால், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2018ல் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ அமைக்கப்பட்டு, 2019 முதல் அதன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. இப்போது தேசிய அளவில், அனைத்து உயர்கல்வி படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு, 20க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகளை என்.டி.ஏ நடத்துகிறது.
ஜூலை 02, 2024