சீனா ஆயுதத்தை தாண்டி இந்தியா மரண அடி-பரபரப்பு தகவல் operation sindoor | pahalgam attack | ind vs pak
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுப்போம் என்று அறிவித்ததும் பாகிஸ்தான் உஷாரானது. ராடார் சிஸ்டம், போர் விமானங்களை எல்லைக்கு கொண்டு வந்து நிலை நிறுத்தியது. நம் அண்டை நாடான சீனா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வழங்கி இருந்தது. அதாவது, பாகிஸ்தான் வான்வெளிக்குள் ஏவுகணைகள், ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தால், அவற்றை கண்டுபிடித்து, இந்த அமைப்பு அழித்து விடும். இது தான் அதன் வேலை. ஆனால் நம் முப்படையும் சேர்ந்து நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வேலை செய்யவில்லை; நம் போர் விமானங்களையோ அல்லது அதில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளையோ இடைமறித்து தாக்கவில்லை. சீனாவின் ஏவுகணை தடுப்பு சிஸ்டத்தை தாண்டி சென்று, பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி உள்ளன.