/ தினமலர் டிவி
/ பொது
/ பஹல்காம் வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு | Pahalagam attack case | NIA | Investigation
பஹல்காம் வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு | Pahalagam attack case | NIA | Investigation
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுதும் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உறுதி அளித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்தனர். தற்போது, வழக்கு விசாரணையை என்ஐஏவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.
ஏப் 27, 2025