காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகள் வீடு குளோஸ்! | Kashmir | Pahalgam Attack
சென்ற 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். நேற்று இரவு காஷ்மீரின் பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் பகுதியில் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளது.
ஏப் 27, 2025