என் அண்ணன் முஜாஹிதீன்: சொந்த தங்கை பகீர் வாக்குமூலம் Pahalgam attack| Kashmir attack| Pakistan
பஹல்காம் சுற்றுலா ஸ்தலத்தில் வெறியாட்டம் ஆடிய 3 பயங்கரவாதிகள், 26 சுற்றுலா பயணிகளின் உயிரைக்குடித்தனர். நீ இந்துவா, முஸ்லிமா? என கேட்டு இந்து என உறுதி செய்த பிறகே, அனைவரையும் சுட்டுக் கொன்றது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கோரத் தாண்டவத்தில் ஈடுபட்ட 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் விவரங்களை காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ளனர். அலி பாய், ஹாஷிம் மூசா ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 3 வது பயங்கரவாதி ஆதில் ஹுசைன் தோகர் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் நகரை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய புல்வாமாவைச் சேர்ந்த Ashif Sheikh ஆஷிப் ேஷக் என்ற இன்னொரு பயங்கரவாதியையும் காஷ்மீர் போலீசார் தேடுகின்றனர்.