உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் ராணுவம் & போலீஸ் முகத்திரையை கிழித்தது இந்தியா Pakistan army Officers Funeral Of Terrorists

பாக் ராணுவம் & போலீஸ் முகத்திரையை கிழித்தது இந்தியா Pakistan army Officers Funeral Of Terrorists

பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதும், சரியான பதிலடி கொடுக்க மத்திய அரசு தீர்மானித்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் கடந்த 7ம் தேதி துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில், 140 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜமீல், முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டால், காலித் என்ற அபு அகாஷா, முகமது ஹசன் கான் ஆகிய ஐந்து பயங்கரவாதிகள் இந்தியாவால் தேடப்பட்டவர்கள். முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜமீல் ஆகிய இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனர்கள் ஆவர்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை