பாகிஸ்தான் மிரட்டலுக்கு அமெரிக்க Ex ராணுவ அதிகாரி கண்டனம் pakistan threatens| pakistan army chief as
ஆபரேஷன் சிந்தூருக்கு பின், அமெரிக்காவுக்கு 2வது முறை சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், அங்கிருந்தபடி இந்தியாவுக்கு எதிராக கொக்கரித்தார். சிந்து நிதி பாகிஸ்தானுக்கும் சொந்தமானது. அதன் குறுக்கே இந்தியா அணை கட்டியபின், ஏவுகணைகள் வீசி தகர்ப்போம். நாங்கள் அணு ஆயுத நாடு; எங்களுக்கு அச்சுறுத்தல் வந்தால், உலகின் பாதி நாடுகளை அழித்துவிடும் சக்தி எங்களுக்கு இருக்கிறது என கூறியிருந்தார். ஆசிம் முனீர் பேச்சை, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, அமெரிக்க மண்ணில் இருந்து கொண்டு ஆசிம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்ததை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.