/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா அடித்தால் முழு போர் வெடிக்கும்: எச்சரிக்கும் பாகிஸ்தான் Pak minister Khawaja Asif|
இந்தியா அடித்தால் முழு போர் வெடிக்கும்: எச்சரிக்கும் பாகிஸ்தான் Pak minister Khawaja Asif|
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊட்டி வளர்க்கிறது. அவர்களை இந்தியாவுக்குள் உருவுருவ செய்து நாசகர வேலைகளை செய்வதாக இந்தியா எப்போதும் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஒருபோதும் பாகிஸ்தான் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது இல்லை. தற்போது, காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றுள்ள சூழலில், பயங்கரவாதிகளுக்கு பயிற்சியும் ஆதரவும் அளித்து வருவதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது. பிரிட்டிஷ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இருப்பது இந்தியாவின் குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது.
ஏப் 25, 2025