100 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது! சுவாரஸ்ய தகவல்கள் | Pamban Bridge | India's First Vertical Lift Se
மண்டபம் நிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது பாம்பன் ரயில் பாலம். 1914 முதல் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல பாலத்தின் இடையே திறந்து மூடும் ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 111 ஆண்டுகளை கடந்த இந்த பாலம் கடலில் வீசும் உப்பு காற்றால் சில ஆண்டுகளுக்கு முன் பாதிப்படைந்தது. ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவியது. 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. புதிய ரயில் பாலம் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 6ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். புதிய பாலம் திறப்புவிழா ஏற்பாடுகள் பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.