/ தினமலர் டிவி
/ பொது
/ ஊராட்சி தலைவருக்கு எதிராக பொங்கிய மக்கள் ₹ 9 Lakhs Cheated | Panchayat President | Thirupalaikudi
ஊராட்சி தலைவருக்கு எதிராக பொங்கிய மக்கள் ₹ 9 Lakhs Cheated | Panchayat President | Thirupalaikudi
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் உமர் பாரூக். திமுகவின் ஒன்றிய அவைத்தலைவராகவும் உள்ளார். ஊராட்சி மன்றத்தின் பின்புறம் ஊராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் வார சந்தை நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 130 தற்காலிக கடைகளில் வரி வசூல் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 9 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. வசூல் பணத்தை ஊராட்சி நிதியிலும், அரசு நிதியிலும் சேர்க்காமல் ஊராட்சி தலைவர் உமர் பாருக்கே வைத்து கொண்டதாக புகார் எழுந்தது.
அக் 21, 2024