/ தினமலர் டிவி
/ பொது
/ ஆபத்து என அலறிய தலைவி: அலட்சியம் காட்டிய போலீசார் | Kommeswaram Panchayat president | tirupathur
ஆபத்து என அலறிய தலைவி: அலட்சியம் காட்டிய போலீசார் | Kommeswaram Panchayat president | tirupathur
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக சோபனா கோவிந்தராஜ் உள்ளார். திமுகவைச் சேர்ந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன் சோபனாவின் கணவர் கோவிந்தராஜ் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார். ஷோபனா 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஊராட்சி தலைவர் பொறுப்பையும் ஒற்றை ஆளாக கவனித்து வந்தார். சோபனாவுக்கும் கோவிந்தராஜின் அண்ணன் பாண்டியனுக்கும் சொத்து பிரச்சனை இருந்தது. இரு தரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பிப் 28, 2025