/ தினமலர் டிவி
/ பொது
/ கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிய காக்கிநாடா துறைமுகம் pawan kalyan| andhra deputy cm| pds rice| kak
கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறிய காக்கிநாடா துறைமுகம் pawan kalyan| andhra deputy cm| pds rice| kak
ஆந்திராவின் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து கிளம்பி 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கப்பலில் ஆய்வு செய்தனர். அதில் 640 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதையடுத்து, ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், உணவு அமைச்சர் நாதல்ல மனோகர், காக்கிநாடா தொகுதி ஜனசேனா எம்எல்ஏ வெங்கடேஸ்வர ராவ், அதிகாரிகள் உள்ளிட்டோர் படகில் சென்று அந்த கப்பலை பார்வையிட்டனர்.
நவ 29, 2024