/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ்சுடன் போட்டி போட்ட மாணவி: ரிசல்ட் என்ன ஆச்சு? plus 2 student suhashini chased government bus
பஸ்சுடன் போட்டி போட்ட மாணவி: ரிசல்ட் என்ன ஆச்சு? plus 2 student suhashini chased government bus
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் சுஹாசினி. வயது 17. தாயை இழந்த சுஹாசினி, அப்பாவுடன் வசித்து வருகிறார். கடந்த மார்ச்சில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்தன. 25ம் தேதி கடைசி பரீட்சை எழுத வீட்டில் இருந்து புறப்பட்டார். பஸ்சுக்காக காத்திருந்தார். ஒரு அரசு பஸ் வந்தது. பரீட்சைக்கு சீக்கிரம் போய் விடலாம் என நினைத்தார். ஆனால் அந்த பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதால் சுஹாசினி அதிர்ச்சியடைந்தார். பள்ளிக்கு செல்ல வேறு பஸ் இல்லாததால், பஸ்சை பிடித்துக் கொண்டு பின்னாலேயே ஓடினார்.
மே 08, 2025