வைஷாலி, ஆனந்த் குமாருக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | PM Modi | Vaishali Rameshbabu | Chess Winner
கிராண்ட் சுவிஸ் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிராண்ட் மாஸ்டர் வைஷாலி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2026 ல் நடக்கும் கேண்டிடேட் தொடருக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதே போல் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் ஆனந்த்குமார். இருவருக்கும் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இருவரையும் பாராட்டி பிரதமர் மோடி வெளியிடுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, சிறந்த சாதனை படைத்த வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். 2025ம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது.