பிரித்தாளும் சக்திகளை வளர விடக்கூடாது Pm modi| ganesh utsav| congress|cji
இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வீட்டில், கடந்த 11ம் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து இருந்தன. இன்று, ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அதிகார வெறி மற்றும் பிரித்தாளும் சக்திகளுக்கு விநாயகர் சதுர்த்தி விழா ஒரு தடையாக இருக்கிறது. நம் நாட்டை பொறுத்தவரை விநாயகர் உற்சவம் வெறும் நம்பிக்கைக்கான பண்டிகை மட்டும் அல்ல.
செப் 17, 2024