கிருஷ்ணகிரியில் தேர்வு அறையில் துடித்த மாணவி | POCSO | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவி பிளஸ் 2 படித்துவந்தார். அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் செவ்வாய் கிழமை உயிரியல் பொதுத்தேர்வு எழுத சென்றார். அப்போது மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக 44 வயதான ஆசிரியர் ரமேஷ் வந்துள்ளார். இவர் வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவி தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது அவரது தோளில் கை போட்டு பாலியல் சீண்டல் செய்துள்ளார் ரமேஷ்.
மார் 19, 2025