உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளச்சாராயமா என போலீசார் விசாரணை Illicit Arrack | Villupuram district | 11 Consumed | 5 discharged

கள்ளச்சாராயமா என போலீசார் விசாரணை Illicit Arrack | Villupuram district | 11 Consumed | 5 discharged

விழுப்புரத்தில் சாராயம் குடித்த 11 பேருக்கு வாந்தி மயக்கம் Desc: விக்கிரவாண்டி இடைத்தேர்தலால், தொகுதி முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வேம்பி மதுராபுரியை சேர்ந்த சக்திவேல், விழுப்புரம் எல்லையில் உள்ள புதுச்சேரிக்கு சென்று சாராயம் வாங்கி வந்தார். நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து குடித்தார். நள்ளிரவில் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கினர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருவருக்கு சிகிச்சை தொடர்கிறது. சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டது. அது கள்ளச்சாராயமா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்ததில் 66 பேர் இறந்த சம்பவத்தின் தாக்கம் தணியாத நிலையில், விழுப்புரம் சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !