உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளச்சாராய விவகாரத்தில் தொடரும் அதிரடி | Police transfer | Kallakurichi | North Zone IG

கள்ளச்சாராய விவகாரத்தில் தொடரும் அதிரடி | Police transfer | Kallakurichi | North Zone IG

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த உடனேயே, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் உள்பட 9 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய எஸ்.பியாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 78 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை