கட்டப்பஞ்சாயத்து மூலம் கமிஷன் பெற்ற சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்!
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த நகைக்கடை அதிபர் முரளி, நண்பர் தமிழ்அழகனுக்காக ஒன்றரை கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளார். பணத்தை அவர்கள் திருப்பி தராதாதால், கோர்ட்டில் முரளி முறையிட்டார். எப்ஐஆர் பதிந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் சிறப்பு எஸ்ஐ சரவணன், இந்த பிரச்னையை தாமே பேசி உடனே முடித்து தருவதாக கூறியிருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து செய்து முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாய் வாங்கி தந்ததாகவும், அதில் 6 லட்சம் ரூபாயை எஸ்ஐ சரவணன் கமிஷனாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீதி பணத்தை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைக்கடை அதிபர் முரளி புகார் அளித்துள்ளார்.
ஜூலை 05, 2025