கோடை மழைக்கே கைவிட்டது கழிவுநீர் கால்வாய் | Pollachi | Drainage | Rain
பொள்ளாச்சியில் வியாழனன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் கழிவுநீர் கால்வாய்களில் பாய்ந்தது. அவை முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததால் கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கோட்டூர் ரோடு திருநீலகண்டர் வீதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்குள் வெள்ளம் தேங்கியது. கடையில் வைக்கப்பட்டிருந்த அரிசி,பருப்பு,சர்க்கரை மூட்டைகள் மழைநீரில் நனைந்து முழுவதுமாக சேதம் அடைந்தது.
ஏப் 04, 2025