அரைகுறை தகவல்களுடன் எப்ஐஆர்: கோர்ட் கண்டனம்
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் திருவள்ளூரில் டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா, கோயம்பேடு சிறப்பு எஸ்ஐயாக இருந்த சுப்புராஜ் மீது பொன் மாணிக்கவேல் வழக்கு பதிந்தார். தம் மீது பொய் வழக்கு போட்டதாக பொன் மாணிக்கவேலுக்கு எதிராக காதர் பாஷா சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார். வழக்கை விசாரித்த கோர்ட், புகாரில் முகாந்தரம் இருந்தால் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
மார் 13, 2025